என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெள்ளகவி கிராமத்திற்கு சாலை"
- கொடைக்கானலில் இருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது வெள்ளகவி மலைக்கிராமம்
- பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் சாலை வசதி கோரி பல்வேறு போராட்டங்கள் செய்துவந்த நிலையில் தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ளது வெள்ளகவி மலைக்கிராமம். கொடைக்கானலில் இருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மிகப்பழமையான இந்த மலைக்கிராமம். இக்கிராமத்திற்கு செல்ல பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை.
இங்குள்ள விவசாய விளைபொருட்களை மலைக்கிராம மக்கள் தலைச்சுமையாகவும், குதிரைகள் மூலமாகவும் கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் பகுதிக்கு கொண்டு சென்று விற்று வாழ்ந்து வருகின்றனர். இந்த மலை கிராமத்தில் 500 குடும்பத் திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாத காரணத்தினால் இந்த மலைக்கிராமத்தை சேர்ந்த பலர் இந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு சென்று அங்கேயே தங்கி விட்டனர்.
பல ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் சாலை வசதி கோரி பல்வேறு போராட்டங்கள் செய்துவந்த நிலையில், பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் முயற்சியினால், கொடைக்கானல் ஆர்.டி.ஓ முருகேசனின் தனிப்பட்ட நடவடிக்கையாலும் தற்போது மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களாக இந்த பணி பல்வேறு தடைகளையும், வனத்துறையின் எதிர்ப்பையும் மீறி நடைபெற்று வருகிறது. சுமார் 12 கி.மீ அளவிற்கு இந்த சாலை பணி முடிவுற்ற நிலையில், இன்னும் ஓரிரு கி.மீ தூரம் மண் சாலை அமைத்தால் இந்த பணி முடிவு பெறும். இருப்பினும் மண் சாலையில் வாகனங்கள் பயணிக்க முடியாது.
எனவே சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இந்த மக்கள் சாலை வசதி இன்றி இருந்து வரும் நிலையில் தற்போது மண் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த மண் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பரிசீலனை செய்து இதற்கு தனி நிதி ஒதுக்கி உடனடியாக தார் சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்றும் வெள்ளகவி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்